Saturday, January 31, 2015

பன்றி சுரத்தை முறியடிக்க உதவும் ஹோமியோபதி!உலகளாவிய வெற்றிச் சரித்திரம் காட்டும் பாதை!------ டாக்டர் எஸ்.வெங்கடாசலம்

பன்றி சுரத்தை முறியடிக்க உதவும் ஹோமியோபதி!





பன்றிக் காய்ச்சல் தடுக்க முடியும்!-டாக்டர் எஸ்.வெங்கடாசலம்

உலகில் அதிநவீன மருத்துவம் என்று சொல்லிக் கொள்ளும் ஆங்கில மருத்துவ முறையின் இயலாமையும், பீதியும் மீண்டும் ஒரு முறை உலக மக்கள் முன் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. வாழ்நிலை, சூழ்நிலைக் காரணங்களால் தோன்றும் புதுப்புது நோய்களைக் கண்டு ஆங்கில மருத்துவ உலகம் திணறுகிறது. உலக மக்களையும் தேவையற்ற அச்சத்தில் ஆழ்த்துகிறது..
பறவைக் காய்ச்சல் என்றாலும், சார்ஸ் நோய் என்றாலும், சிக்குன்குனியா என்றாலும்,டெங்கு என்றாலும், பன்றிக்காய்ச்சல் என்றாலும் இவை புயல் வேகத்தில் உலகை தாக்கி மனித குலத்தையே கூண்டோடு அழித்துவிடும் என்றும், உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனும் மிக மிக எச்சரிக்கையோடு தற்காத்துக் கொள்ளப் போராட வேண்டும் என்றும், கிருமிகள் என்னும் சிற்றுயிர்களால் மனித இனம் மடிந்துவிடும் என்றும் ஆங்கில மருத்துவ முறை பீதியை ஏற்படுத்துவது வாடிக்கை. 

அது மட்டுமின்றி இந்தப்பேரழிவு நோய்களுக்கு எதிராகத் தடுப்பு மருந்துகள் கண்டுபிடித்து உலகைக் காப்பாற்ற சில மருந்து நிறுவனங்கள் முயற்சி செய்து வருவதாகவும் ஆடம்பரமாய் ஆர்ப்பரிப்பார்கள். எப்போதெல்லாம் தொற்றுநோய்களால் பெருவாரி நோய்களால் கூட்டம் கூட்டமாய் மனித இனம் பாதிக்கப்படுகிறேதோ அப்போதெல்லாம் போர்க்கால நடவடிக்கைகளால் ஆங்கில மருத்துவம் மட்டுமே தலையிட்டு அவற்றை கட்டுப்படுத்தி வருவது போல தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

ஆனால் உலக அனுபவத்தில், அலோபதி வரலாற்றில் இவை அனைத்தும் பச்சைப் பொய்கள் புனை கதைகள். 4ஆண்டுகளுக்கு முன் மெக்ஸிகோவில் பன்றிக்காய்ச்சல் தாக்கி தினசரி மக்கள் மரணமடைந்து வருவதாக ஊடகங்கள் செய்தியைப் பரப்பின. நூற்றுக்கணக்கானோர் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. மெக்ஸிகோவில் மட்டுமின்றி அமெரிக்கா முழுவதிலும், உலக நாடுகள் முழுவதிலும் இது பரவ வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டது. பன்றிக் காய்ச்சல்பன்றி இறைச்சி உண்பவர்க்கும் பன்றி வளர்ப்பவர்க்கும் வரக்கூடும் என்பதால் பன்றிகள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது (பன்றி இனம் முழுவதும் அழித்துவிடும் யோசனை கூட இவர்களுக்குத் தோன்றலாம். அப்படி அழித்து விட்ட பின்பும் கூட இந்தப் பன்றிக்காய்ச்சல் அழிந்து விடும் என்று இவர்களால் உறுதி கூற முடியாது என்பதே உண்மை)


பன்றிக்காய்ச்சல் என்றால் என்ன?
இது வழக்கமாகப் பன்றிகளிடம் தோன்றும் சுவாச நோய்களில் ஒன்று. Type A இன்புளூயன்சா வைரஸ் காரணமாக பன்றிகளிடம் தோன்றும் சளி சுரமே பன்றிக்காய்ச்சல் எனப்படுகிறது. இந்நோய் வருடம் முழுதும் வரக்கூடிய வாய்ப்பு இருந்தாலும் மழைக்காலம் துவங்கி முடிவதற்குள்ளான இடைப்பட்ட காலத்தில் அதிகம் பரவுகிறது. மனிதர்களுக்கு மழைக்காலத்தில் ஏற்படும் சளி சுரம் போன்றதே பன்றிக்கு ஏற்படும் சளிசுரமும்.

பன்றிக் காய்ச்சல் வைரஸ் எது ?
பறவைக் காய்ச்சல் வைரஸ், மனிதரிடம் ஏற்படும் இன்புளூயன்சா வைரஸ், பன்றிகளிடம் காணப்படும் இன்புளூயன்சா வைரஸ் இவையெல்லாமே கலந்து இன்று பன்றிகள் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இன்புளூயன்சா வைரஸ்களில் முக்கியமானவை நான்கு உள்ளன. 1).H1N1 2).H1N2 3).H3N2 4).H3N1. தற்போது அதிகம் பரவுவது H1N1 வைரஸ் எனப்படுகிறது.


பன்றி இறைச்சியால் நோய் பரவுமா?
பன்றி இறைச்சி உண்பதால் இந்நோய் பரவுவதில்லை. 1600 பாரன்ஹீட் வெப்பத்தில் சமைக்கப்படும்போது பன்றிக் காய்ச்சல் வைரஸ்கள் மற்ற கிருமிகள் போலவே முற்றிலும் அழிந்து விடுகின்றன. இந்தியா போன்ற நாடுகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் தான் பன்றிகள் வளர்க்கிறார்கள். அவர்களுக்கு இத்தகைய நோய் தாக்கி மரணங்களை ஏற்படுத்தியதில்லை. மேலும் பன்றிகளோடு சேர்ந்து வாழும் சூழ்நிலை காரணமாக அத்தகைய தொற்றுக் கிருமிகளுக்கு எதிரான எதிர்ப்புத்திறனும் தலித் மக்களிடம் தோன்றி விடுகின்றது. அமெரிக்காவின் நிலை வேறு.

இன்புளூயன்சா வைரஸ் பொதுவாக பன்றிகளிடமிருந்து மனிதர்களுக்கு மட்டுமல்ல. மனிதர்களிடமிருந்து பன்றிகளுக்கும் பரவுகின்றன என்பதே உண்மை. அமெரிக்காவி லுள்ள  CDC நிறுவனம் தகவலின் படி கடந்த காலங்களில் ஒரு வருடத்திற்கு ஒருவர் அல்லது இருவர் மட்டுமே இந்நோயால் மரணமடைந்துள்ளனர். டிசம்பர் 2005 முதல் பிப்ரவரி 2009க்குள் 12 பேர்கள் இறந்துள்ளனர்.

மனிதரிடம் பரவிய பன்றி சுரம் மற்றவர்க்கு பரவுவது எப்படி ?
Swine flu எனப்படும் பன்றிக்காய்ச்சல் மனிதரிடம் பரவும் வழிகள் : 1).தொடுதல் 2).தும்மல் 3).முத்தமிடுதல் 4).நோயுற்ற பன்றியை அல்லது நோய்கிருமி தொற்றியுள்ள பொருட்களை தொடுதல் 5).அதன் பின் மூக்கு, வாய், கண்களைத் தொடுதல் என்று அலோபதி உலகம் நீண்ட பட்டியலை அடுக்குகிறது.

தும்மும் போது ஏவுகணையை வீசும் வேகத்தில் இக்கிருமிகள் பாய்ந்து சென்று தாக்கும் என்று கூறுகின்றனர். அவ்வளவு வேகத்தில் எத்தனை ஆயிரம் மனிதர்களை இக்கிருமிகள் கடந்து செல்லும்? ஏன் ஒரு சிலர் மட்டும் கிருமிகளின் தாக்குதலுக்கு பலியாகின்றனர் ? என்ற கேள்விக்கு பதில் உண்டா?

மனித சளிசுரத்திற்கு பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள் பன்றி காய்ச்சலுக்குப் பயன்படாது என்கிறார்கள். எனவே இந்நோய்க்குத் தனி தடுப்பூசி தேவை என்கிறார்கள். இனி எத்தனை ஆயிரம் தடுப்பூசிகளை உலகம் சந்திக்கப் போகிறதோ தெரியவில்லை!

பன்றிக்காய்ச்சலின் போது காணப்படும் அறிகுறிகள் என்ன?
வழக்கமான இன்புளூயன்சா சுரத்தில் தோன்றும் பல குறிகள் தான் பன்றிக் காய்ச்சலிலும் காணப்படும் பிரதானமான குறிகள் : 1).சுரம் 2).இருமல் 3). தொண்டை வலி மேலும் ஏற்படக்கூடிய குறிகள்: ஜலதோசம், நீர்ஒழுக்கு, மூக்கு அடைப்பு, வாந்தி, வயிற்றுப்போக்கு, தசைவலி, தலைவலி, குளிர் உணர்வு, கடும் சோர்வு, பலவீனம், கண்வலி, பசியின்மை சிக்கலான நோய்க்குறிகள் சிலருக்கு ஏற்படலாம். அவை பிராங்கைடிஸ், நிமோனியா, சுவாச இயக்கம் நின்றுவிடுதல், சைனஸ்தொற்று, காதுத் தொற்று போன்றவையாகும்.



இந்நிலையில் நோய் எதிர்ப்பு ஆற்றல் முற்றிலும் அழிந்து விட்ட நோயாளி மரணமடைய நேரிடுகிறது. (பன்றிகளிடம் பன்றிக் காய்ச்சலின் போது ஏற்படும் அறிகுறிகள் : சுரம், செயலற்ற மந்தநிலை, மூக்கு ஒழுக்கு, வாய்வழி சுவாசம், விட்டு விட்டு இருமல் - இக்குறிகளால் பன்றிகள் கடுமையாக பாதிக்கபட்டாலும் பெரும்பாலும் மரணம் ஏற்படாது. மரணவிகிதம் பன்றிகளிடம் மிக மிகக் குறைவு. இந்நோய் பன்றிகளிடமிருந்து 7 நாட்களில் நீங்கி விடுகிறது.)

பன்றிக்காய்ச்சலுக்கு ஹோமியோபதி சிகிச்சை

வறுமையும், அறியாமையும், மூடநம்பிக்கைகளும், சுகாதாரக்கேடுகளும், வேலையின் மையும் எங்கு உள்ளதோ அங்கு நோய்கள் தலைவிரித்து ஆடுவது வாடிக்கை. ஆனால் அறிவியலும் தொழில் நுட்பமும், மருத்துவமும், செல்வங்களும் பெருகி நிரம்பி வழிவதாகக் கூறப்படும் அமெரிக்கா போன்ற நாடுகளில் சாதாரண பருவகால நோய்களுக்கும் கூட மக்கள் பலியாவது ஏன்? கர்ப்பகாலம் முதல் பிறந்து சில ஆண்டுகள் வரை தடுப்பூசிகள் போடப்பட்டும் நோய்கள் தாக்குவது ஏன்? ஆங்கில மருத்துவ ஆராய்ச்சிகளையும், நடைமுறைகளையும் புனிதமாய் போற் றும் அறியாமையும், மூடநம்பிக்கையும் உலகை விட்டு நீங்கும் வரை ஏழை, பணக்காரன் வித்தியாசமின்றி இந்தியா.அமெரிக்கா வித்தியாசமின்றி எல்லோரை யும் எல்லா நாடுகளையும் எல்லா காலங்களிலும் பாதிக்கக்கூடிய வகையில் நோய் தாக்குதலும் ஆங்காங்கே அழிவுகளும் பீதிகளும் இருக்கத் தான் செய்யும்.

ஹோமியோ தடுப்பு மருத்துவ வெற்றிப் பதிவுகள்

இன்புளூயன்சா நோய் தடுப்பில் ஹோமியோபதியின் வெற்றிக்குச் சரித்திர சான்றுகள் உள்ளன. அமெரிக்காவில் 1918ல் பரவிய இன்புளூயன்சா சுரத்தைக் கட்டுப்படுத்துவதில் ஹோமியோபதியின் ஆற்றல் நிரூபிக்கப்பட்டது. கொலம்பியாவைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி 1918 Flue epidemic நேரத்தில் ஆங்கில சிகிச்சை பெற்றவர்களில் மரணவிகிதம் 30 சதவீதம் என்றும் ஹோமியோபதி சிகிச்சை பெற்றவர்களில் மரணவிகிதம் 1 சதவீதம் என்றும் தெரிகிறது. அதாவது ஹோமியோபதி சிகிச்சை பெற்ற 1500 நோயாளிகளில் 1485 நோயாளிகள் முழுநலம் அடைந்துள்ளனர்.


ஓகியோபகுதியில் National Homeopathic Hospitalல் சேர்க்கப்பட்ட 1000 நோயாளிகளில் ஹோமியோபதி சிகிச்சை அளிக்கப்பட்டதன் விளைவாக ஒருவருக்கு கூட மரணம் ஏற்படவில்லை 100 சதவீதம் வெற்றி.

சிகாகோவை சேர்ந்த Dr.Frank Wieland M.D. அவர்கள் “8000 தொழிலாளர்க்கு புளுசுரத்திற்கு ஹோமியோபதியிலுள்ள ஜெல்சிமியம் எனும் ஒரே ஒரு மருந்து மட்டுமே தரப்பட்டது. எந்தச் சூழலிலும் அவர்களுக்கு ஆஸ்பிரினோ, தடுப்பூசிகளோ பயன்படுத்தவில்லை. இச் சிகிச்சையில் கிடைத்த வெற்றி 98 சதவீதம் .ஓகியோ மாகாணத்தில் அலோபதி சிகிச்சை பெற்ற 24000 நோயாளிகளில் 28.2 சதவீதம் இறப்பு ஏற்பட்டதாகவும் ஹோமியோபதி சிகிச்சை பெற்ற 26000 நோயாளிகளில் 1 சதவீதம் இறப்பு ஏற்பட்டதாகவும் .கனெக்டிகட் பகுதியில் ஹோமியோ சிகிச்சை பெற்ற 6602 நோயாளிகளில் 6547 பேர்கள் முழு குணமடைந்தனர் என்றும் மரண விகிதம் 1 சதவீதத்திற்குமே குறைவு என்றும் அமெரிக்காவில் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

பன்றிக் காய்ச்சல் சிகிச்சையில் பயன்படும் முக்கிய ஹோமியோ மருந்துகளும் குறிகளும் :

1).ஜெல்சியம் (Gelsemium) :

ஆரம்பநிலை சளிசுரத்தின் குறிகள் தும்மல், மூக்குஉறுத்தல், கடும்தலைவலி, உடல்வலிகள், தசைவலி குளிர் உணர்வு, நடுக்கம், களைப்பு, மந்தமான உணர்வு, தூக்கக் கலக்கத்துடன் சுரம், கண்கலங்குதல். அகோனைட்டை விட குறைவான தீவிரத் தன்மையுள்ள சுரம். ஆனால் கடின இருமல். 1918ல் பெருவாரியாக மக்களைத் தாக்கிய போது (அமெரிக்காவில்) அதிகம் பயன்பட்டமருந்து இது.

2] பாப்டீசியா (Baptisia) :

கடுமையான ஃபுளூ சுர அறிகுறிகள் பிதற்றல், வாய்ப்புண்கள், உடல்பாகங்கள் சிதறிக் கிடக்கும் உணர்வு, துர்நாற்றமுள்ள வயிற்றுப்போக்கு. (மருத்துவர் J.H.கிளார்க் இன்புளூயன்சாவிற்கு ஏறக்குறைய இது “specific” எனக் குறிப்பிடுகிறார். 30வது வீரியம் தேர்வு செய்கிறார். மருத்துவர் ஹியூக்ஸ் இம்மருந்தை மிகவும் புகழ்கிறார். ஆனால் 1x, 2x, வீரிய நிலை திரவ மருந்தையே பயன்படுத்தியதாகக் கூறுகிறார்)

3] யூபடோரியம் பெர்ஃபோலியேடம்:

கடுமையான எலும்பு வலிகள், உடல்வலிகள், தும்மல் களகளத்த இருமல் குறிகளுடன் சுரம் குரல் வளையில் கடும் வலி, கரகரப்பு, தாகம், தாகத்துடன் தடுமன், நீர் அருந்தினால் வாந்தி. இருமலில் நெஞ்சைப் பிடித்துக் கொள்ளுதல். ஆரம்ப நிலையில் நன்கு பயன்படும் மருந்து இது.

4] ஆர்சனிகம் ஆல்பம்:

இந்நோயின் பல கட்டங்களிலும் பயன் படக் கூடிய மருந்து இது. சுவாசப்பாதையின் மேல்பகுதியில் ஏற்படும் ஆரம்ப அறிகுறிகளுக்கு இம்மருந்து உடனடி பலனளிக்கும். அதிக சுரம், அமைதியின்மை, பதட்டம், களைப்பு, கொஞ்சம் கொஞ்சமாய் தாகம், தும்மல், நீர் ஒழுக்கு போன்ற குறிகள் திடீரென முற்றுகையிடும் போது ஆர்சனிகம் ஆல்பம் நல்ல நிவாரணம் வழங்கும்.

5] ரஸ்டாக்ஸ்:

அமைதியின்மையுடன் சுரமும் உடல்வலிகளும், குறிப்பாக கால்களில் வலி, உளைச்சல் (அசைவுகளில் சற்று நிவாரணம்) தும்மல் கடின இருமல் தொற்றுநோயாக பரவித் தாக்கும் போது இம்மருந்து பெரிதும் பயன்படும். .இன்புளூயன்சா சுரம்,சளி போன்றவை சாதாரண ஜலதோசமாக மாறி பின் நலமடையும் ஒய்வில் குறிகள் அதிகரிக்கும் என்பது கவனிக்கத்தக்கது.

6] ஆர்ஸ் அயோடு:

இன்புளூயன்சா சுரத்தின் பிரதான குறிகள் இம்மருந்தில் காணப்படுகின்றன கடுமையான ஜலதோசம், தும்மல், எரிச்சலும் அரிப்பும் உள்ள நீர் ஒழுக்கு, களைப்பு, குளிர் உணர்வும் வெப்ப உணர்வும் உடலினுள் பாய்தல் (மருத்துவர் ஹேல்இன்புளூயன்சாவிற்கு இம்மருந்தினைப் பரிந்துரைக்கிறார்

7] பிரையோனியா :

தலைவலி, உடல்தசைவலிகளுடன் சுரம், இருமல், வயிற்றுவலி, நா வறட்சி, குளிர் நீர் விரும்பும் அதிக தாகம். அசைவற்றுக் கிடக்க விருப்பம். அசைவுகளால் தொந்தரவு அதிகரிக்கும். இருமினால் நெஞ்சுப்பகுதியில் வலி, மலச்சிக்கல் ஒய்விலும், அழுத்தத்திலும் சற்று நிவாரணம்.

8] சபடில்லா:

திறந்த வெளியில் சென்றால் தும்மல், தும்மலுடன் கண்ணீர், தொண்டையில் வீக்கமும் வலியும் வெறும் வாயை விழுங்கினால் அதிகரிக்கும். தும்மலின் போது மொத்த உடலும் குலுங்கும். முன் தலைவலி வறட்சி ஆனால் தாகம் இருக்காது. இருமல் கீழேபடுத்தால் அதிகரிக்கும்.

ஹோமியோ தடுப்பு மருந்து :

 முதல் நாள் ஒரு வேளை’இன்புளூயன்சினம் 200’[INFLUENCINUM-200C]
2ஆம் நாள் முதல் தினம் காலை வெறும் வயிற்றில் ‘ ஆர்சனியம் ஆல்பம் 30’ [ARSENICUM ALBUM-30C] தொடர்ந்து 3 நாட்களுக்கு.


இவ்விரு மருந்துகளும்  ஹோமியோபதி மருத்துவரின் ஆலோசனை பெற்று எடுத்துக் கொள்ளலாம். நோய் தாக்கியிருப்பின்  குறிகளுக்கேற்ப ஆற்றல்மிக்க இதர ஹோமியோ மருந்துகள் மூலம் சிகிச்சை பெற்று எளிதில் குணமடையலாம்.

Tuesday, January 6, 2015

பெண்களுக்கான அற்புத ஹோமியோ நிவாரணி ஃபாலிகுலினம் (FOLLICULINUM) -டாக்டர் எஸ்.வெங்கடாசலம்


பெண்களுக்கான அற்புத ஹோமியோ நிவாரணி ஃபாலிகுலினம் (FOLLICULINUM) -   டாக்டர் எஸ்.வெங்கடாசலம்                                                                                                                            
இது பெண்களுக்கான மிகச்சிறந்த ஹோமியோ நிவாரணி. இதனைக் கண்டறிந்தவர் பிரிட்டனைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவ நிபுணர் மெலைசா ஆசிலம். சினைப்பைகள் சுரக்கும் இயற்கை ஹார் மோன் Folliculin  (இதற்கு Oestrogen என்று பெயர்). இதனை வீரியப்படுத்திக் தயாரிக்கப்பட்ட மருந்து என்பதால், பெண்களின் ஹார்மோன் அமைப்பு பாதிப்புகளுக்கும், பலவித உடல் நலப் பிரச்சனைகளுக்கும், உணர்வுரீதியான பாதிப்புகளுக்கும், குறிப்பாக மாதவிடாய் பிரச்சனைகளுக்கும் உதவும் வகையில் அமைந்துள்ளதாக டாக்டர். மெலைசா ஆசிலம் அழுத்தமாகக் கூறுகிறார்.

மனநிலைகளும் உணர்வு நிலைகளும்
பிறரோடு பழகுவதில் தன்னை முழுவதுமாக இழத்தல்; பிறர் வயப்படுதல்.
தனது நேரம், கவனம், ஆற்றல் அனைத்தையும் பிறருக்காக, பிறரின் எதிர்பார்புகளுக்காக செலவிடுதல் பிறரின் கால்மிதிப் போல் ஆகிவிடுதல்.
தனது தனித்தன்மை’, ‘சுயம்’ ‘தன்னுணர்வுஇழந்து, தான் யார்? தனது விருப்பு வெறுப்பு என்ன? என்ற உணர்வு கூட இல்லாமை.
எளிதில் மனம் உடைதல்; புண்படுதல்; அமைதியிழத்தல்; மன உறுதியை இழத்தல், உணர்வுரீதியாக, உளவியல் ரீதியாக சோர்வடைதல்.
தனித்திருக்க விரும்பமின்மை.

மாதவிடாய்க்கு முந்திய உடல்மன நிலைகள் (PreMenstrual Problems))
கருமுட்டை வெளியேறும் நாளிலிருந்து மாதவிடாய் துவங்கும் வரையிலும் ஏற்படும் பலவிதக் குறிகளுக்கு ஏற்றது (symptoms from ovulation to Menses).
சினைப்பை என்பது படைப்பாற்றல் மிக்க ஓர் உறுப்பு. அது செயல்படாவிட்டால் படைப்பு தடைபடும். இந்தத் தடைக்கான மூலகாரணம் ஆதிக்க மனோபாவமும் அதிகார உணர்வும் கொண்ட பெற்றோர் அல்லது வாழ்க்கைத் துணையே (Domineering Parant or Spouse). படைப்பு ஆற்றல் அடக்கப்பட்டால் அல்லது தடுக்கப்பட்டால் அது எங்கே செல்லும்? என்ன ஆகும்? அது நோய்களாய் வடிவங் கொள்ளும். மனஅழுத்தம், மனச்சோர்வு, பதட்டம், அதிஉணர்ச்சி, உறுதியற்ற மனநிலை உட்பட பல பாதிப்புகளை ஏற்படுத்தி விடும்.
மனச்சோர்வும் மனக் கிளர்ச்சியும் மாறிமாறி ஏற்படும்; அழுகை உண்டாகும். எரிச்சலும்,        கோபமும் ஏற்படும். மனநிலை ஏற்ற இறக்கங்கள் ஏற்படும். பீதி ஏற்படும்.
சப்தம், தொடுதல், வெப்பம் தாங்க இயலாது.
பாலுணர்வு மிகக் குறைவாக அல்லது மிக அதிகமாக இருக்கும். குறிப்பாக அதிக பாலியல் கிளர்ச்சி காணப்படும். பாலியல் இயற்கை குறித்து மாறாத எண்ணம் இருக்கும் (Fixed ideas of Sexual Nature).
பெண்ணுறுப்பில் அரிப்பு ஏற்படும்.
மாதவிடாய்க்கு முன்பாக மார்பகங்கள் வீங்கி, வலி ஏற்படும். தொட்டால் வலி அதிகரிக்கும். இவ்வலி மாதவிடாய் வந்தபின் மறையும்.
மாதவிடாய்க்கு முன்பாகக் கடுமையான ஒற்றைத் தலைவலி ஏற்படும்.
குமட்டலும், வாந்தியும், வயிற்றுப்போக்கும் ஏற்படும். பின் மலச்சிக்கல் ஏற்படும் - இரு நிலைகளும் மாறிமாறி ஏற்படும்..
மாதவிடாய்க்கு 10 நாட்கள் முன்பாக வயிற்றுப்போக்கு ஏற்படும்.
மாதவிடாய்க்கு முன்பாக அல்லது கருமுட்டை வெளியாகும் காலத்தில் அதிகளவு சாப்பிடாமலேயே எடை அதிகரிப்பு & நீர் உடம்பாகப் பெருத்தல் இரண்டும் ஏற்படலாம். (சில பெண்களுக்குக் கட்டாயம் அதிக அளவு உண்ணுதலில் மிகுந்த விருப்பம் ஏற்படலாம்.)
கருமுட்டை வெளிப்படும் நாட்களில் சினைப்பைப் பகுதியில் இழுக்கும்வலி, எரிச்சல்வலி, கவ்விப்பிடிக்கும் வலி, திட்டுத்திட்டாய் மாதவிடாய் படுதல்,  நீர்மக்கட்டிகள் போன்ற பிரச்சனைகள் தோன்றுகின்றன.
மாதவிடாய்க்கு முன்பு உடலின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு உபாதைகள் எழுகின்றன.
கோதுமை மற்றும் சர்க்கரை மீது அதீத விருப்பம் உண்டாகும்.
தலைவலியுடன் அதிகளவு சளிப்பிடிக்கும்.
முகத்தில் பருக்கள் வெடிக்கும். விரல்களில் வறட்சியுடன் சரும எழுச்சிகளும், நகங்களில் பிளவும், உடைதலும் உண்டாகும். பலவித தோல் ஒவ்வாமைகள், சரும எழுச்சிகள், அரிப்பு, வறண்ட கரப்பான் படை, பெண்களின் தலையில் சொட்டை விழுதல் போன்றவை ஏற்படும்.
இருதயத்தைச் சுற்றி இறுக்கும் உணர்ச்சி ஏற்பட்டு இடதுகையில் பரவும். நுரையீரலுக்குப் புதிய காற்றுத் தேவைப்படும். காற்றை நீண்டு சுவாசித்தல்; ஆழ்ந்த பெருமூச்சு விடுதல்; வறட்டு இருமல் ஏற்படுதல்; இருதய இறுக்க உணர்ச்சியில் இருமல் மேலும் அதிகரிக்கும்.
மாதவிடாய்க்கு முன்பும், கருமுட்டை வெளிப்படும் போதும், மாதவிடாயின் போதும் முதுகிலும், அடிமுதுகிலும் வலி அதிகரிக்கும்.
மாதவிடாய்க்கு முன் கல்லீரல் வீக்கம்; அஜீரணம்; வாந்தி, குமட்டல்; வலது கீழ் உதரவிதானப் பகுதியில் மாதவிடாய் முன்வலிதோன்றுதல்.
வயிறு வீங்குதல், கனத்தல், இரைச்சல் ஏற்படுதல், மலச்சிக்கல் ஏற்படுதல், சிலசமயம் மலச்சிக்கலும் வயிற்றுப்போக்கும் மாறி மாறி ஏற்படுதல். மலக்குடல் பகுதியில்       கனஉணர்வு.
திரவங்கள் விழுங்கும்போது தொண்டையில் தாங்க முடியாத அழுத்தமும் வலியும் ஏற்படும்.
வேகமான இருதயத்துடிப்பும், மயக்க உணர்வுடன் கூடிய படபடப்பும் ஏற்படும்.
மீண்டும் மீண்டும் நீர்ப்பை அழற்சி ஏற்படும்.
மாதவிடாய் காலப் பிரச்சனைகள்
சினைப்பைகள் மையப்படுத்தி மாதவிடாயின் போது வலி ஏற்படும்.
நீடித்த, ஏராளமான மாதவிடாய், நல்ல சிவப்புக் குருதியாக கரும்புள்ளிகளுடன் வெளிப்படும்.
பொதுவாக, குறுகிய கால அல்லது நீடித்த மாதவிடாய் சுழற்சி சம்பந்தமான அனைத்து      வகைப் பிரச்சனைகளுக்கும் Folliculinum  ஏற்றது.

மாதவிடாய் முற்றுக் காலப் பிரச்சனைகள் (Menopausal Problems)
மாதவிடாய் முற்றுக்காலத்தில் தோன்றும் பெருமளவிலான உடல் மற்றும் மனக்குறிகளைச் சீராக்கக் கூடிய ஆற்றல் இம்மருந்துக்கு உண்டு.
மாதாந்திரச் சுழற்சியில் ஒழுங்கீனம்
அதிக ரத்தப்போக்கு
உடலில் வெப்ப அலைகள், அனல்வீச்சு.
இரவு வியர்த்தல்; காற்றுப்பசி; கிறுகிறுப்பும் மயக்கமும்
வயிறு கனத்தல்
கர்ப்பப்பையில் தசைநார்க்கட்டிகள்
மிகை உணர்ச்சி - சப்தம், வெப்பம், தொடுதல் தாங்க இயலாது.
யோனி வறட்சி; மஞ்சள் அல்லது மரக்கலரில் கழிவு வெளிவருதல்.

இக்குறிகளில் எவையேனும், அறுவைச் சிகிச்சை மூலம் கர்ப்பப்பை நீக்கப்பட்டபின் , அல்லது சினைப்பை நீக்கப்பட்டபின் காணப்பட்டால் Folliculinum பயன்படும். Menopause காலத்தில் அல்லது கர்ப்பப்பை, சினைப்பை அகற்றிய பிறகு சினைப்பை சுரக்கும் இயற்கையான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் அளவில் பற்றாக் குறை ஏற்பட்டுவிடும். ஃபாலிகுலினம், சினைப்பையின் ஈஸ்ட் ரோஜன் சுரப்பைத் தூண்ட வாய்ப்புள்ள போது தூண்டுகிறது. அத்தோடு சிறிதளவு ஈஸ்ட்ரோஜன் சுரக்கக்கூடிய அட்ரினல் சுரப்பி, கல்லீரல், சிறுநீரகங்கள் போன்ற பாகங்களையும் தூண்டு கிறது. ஞஸ்ஹழ்ஹ் அகற்றப்பட்ட பின்னரும் இச் செயல் நடைபெற ஃபாலிகுலினம் பயன்படுகிறது.
ஃபாலிகுலினத்தின் இதர பயன்பாடுகள் :
இயல்பான நிலையில் சினையகங்கள் புரெஜெஸ்டிரான் ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. இது இனப்பெருக்கத்திற்குத் தேவையான அளவிற்கு உற்பத்தி ஆகிறது. அட்ரினல் சுரப்பிகள் சில வேதிப்பொருட்களை உற்பத்தி செய்கிறது. இவை ஒருவகை ஹார்மோன்களாக மாற்றம் அடைகின்றன. இத்தகைய ரசாயன மாற்றத்தின் போது புரொஜெஸ்டிரான் உற்பத்தி செய்யப்படுகிறது. சினைப்பைகளால் உற்பத்தி செய்யப்படும் புரொஜெஸ்டிரான் அளவு குறைவாக இருந்தாலும் Corticosteroid உற்பத்திச் செலவிலேயே புரொஜெஸ்டிரான் கிடைப்பதால் மாதவிடாய் சுழற்சியில் தடையும், பாதிப்பும் நிகழாது.
அட்ரினல் சுரப்பி பலவித Cortico steroid களை உற்பத்தி செய்கிறது. அவை ஒவ்வொன்றும் ஒரு பணியை மேற்கொள்கிறது. சிலவற்றிற்கு உடல் திசுக்களின் நீர்சமநிலையைப் பாதுகாப்பது பொறுப்பு. அப்போது செல்களிலுள்ள Iodium & Pottassium அளவுகளை ஒழுங்குபடுத்தும்; சில ஹார்மோன்கள் அலர்ஜி பாதிப்புகளைத் தடுக்கும்; சில ஹார்மோன்கள் ரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்தும்; சில ஹார்மோன்கள் நோய் எதிர்ப்பு மண்டலம் தொடர்பான பாகங்களை இயக்கும்

குழந்தைப் பிறப்பை கட்டுப்படுத்தும் மாத்திரைகள் பெண்கள் உடலின் இயற்கையான இயக்கப் போக்குகளில் மாற்றங்களும், நோய்களும் ஏற்படுத்துகின்றன என ஹோமியோபதி நிபுணர்கள் உறுதிபட நம்புகின்றனர். கருத்தடை மாத்திரைகள் உண்ட பெண் மீண்டும் கர்ப்பம் அடைவது கடினம். கருத்தடை மாத்திரைகளால் இழந்த உடல் சமநிலையை மீட்கவும், மீண்டும் கருத்தரிக்கும் வாய்ப்பை உருவாக்கவும்  ஃபாலிகுலினம் உதவுகிறது.
மாதச் சுழற்சியைத் தற்காலிகமாக நிறுத்தவும், கருவைத் தடுக்கவும் எடுக்கப்படும் ஊசிகள், மருந்து, மாத்திரைகளால் பெண்ணின் உடலில் Estrogen Poisoning ஏற்படுகிறது. இதனால் உடலியக்க ஒழுங்குகள் தவறுவதோடு அதிகமாதப் போக்கு, கருவணு வெளிவராமை, கருத்தரிக்க இயலாமை, கருத்தரித்து விட்டால் இடையிலேயே சிதைவு, பிரசவத்திலும் பாலூட்டுவதிலும் இன் னல்கள் ஏற்படுகின்றன. இத்தகைய விளைவுகளை நிறுத்த ஃபாலிகுலினம் துணை புரிகிறது.
உடல்ரீதியாக, உளரீதியாக, பாலியல்ரீதியாக துஷ்பிரயோகம், பலாத்காரம் செய்யப்பட்ட வரலாறுள்ள பெண்களின் பிரச்சனைகளுக்கு இம்மருந்து பயன்படும். பாலியல் கொடுமை களுக்கு தற்போதோ அல்லது முன்போ ஆளான பெண்களுக்கு அவை நினைவிருக்கிறதோ இல்லையோ ஃபாலிகுலினம் சிறப்பாகப் பயன்படும்.
பெண்ணின் உடலையும் மனதையும் அவளது இசைவின்றி தவறாகப் பயன்படுத்தியவர் பெற்றொராக, உடன்பிறந்தவராக, உறவினராக, அன்போடு பராமரிப்பவராக, எஜமானராக, உயர் அதிகாரியாக இருக்கலாம். மாட்டேன்என்ற ஒருமுறை கூடச் சொல்ல முடியாமல் இருந்திருக்கலாம். துஷ்பிரயோகம் செய்தவரோடு பலமாக இணைக்கப்பட்ட நிலையை, தேவையற்ற கட்டுப்பாட்டைத் தகர்க்க ஃபாலிகுலினம் பயன்படும். மேலும் பழைய பலமான நினைவுகளின் மோதலைச் சந்திக்க கூடுதல் பலம் அளிப்பது ஃபாலிகுலினம்.
அவர்களின் மன உறுதியை மீட்கவும், தன் மதிப்பு உணர்வை அதிகரிக்கவும், நலமான உணர்வை ஏற்படுத்தவும் ஃபாலிகுலானம் அரிய வகையில் பயன்படும்என்று சில ஹோமியோ நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வீரிய அளவு :
ஃபாலிகுலினம் வெவ்வேறு வீரியங்களில் வெவ்வேறு விதமாக பலனளிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
3X அல்லது 4X வீரியம் - அடக்கப்பட்ட மாதவிடாயிலும், குறைவான மாதப்போக்கிலும் தூண்டுதல் தந்து பலனளிக்கும்.
7C வீரியம் - மாதவிடாய் தொடர்புள்ள, ஹார்மோன் தொடர்புள்ள உடலியக்கச் சீர்குலைவுகளை, வலிகளை சமனப்படுத்தவும், ஒழுங்குப்படுத்தவும் உதவும்.
9C வீரியம் -  அடிக்கடி மாதப்போக்கு ஏற்படக்கூடிய விபரீதத்தைத் தடுக்கும்.
நோயாளிக்கு வேறு ஹோமியோபதி மருந்துடன் ஃபாலிகுலினத்தை தேவைக்கேற்ப மாற்றிமாற்றி தரலாம்.

மாதவிடாய் சுழற்சி துவங்கி 10 முதல் 14 நாட்களுக்குள் 5 நாட்கள் அல்லது மாதவிடாய் சுழற்சி துவங்குவதற்கு 5 நாள் முன்பு இரவு வேளை இம்மருந்தை உபயோகிக்கலாம். (மாதவிடாய் நின்றுவிட்ட, அறியமுடியாத பெண்களுக்கு இது பொருந்தாது)