Sunday, July 6, 2014

இரத்தத்தை சுத்தப்படுத்தி இதயத்தை பாதுகாக்கும் காளான்கள்


இரத்தத்தை சுத்தப்படுத்தி இதயத்தை பாதுகாக்கும் காளான்கள்



மக்களால் அதிகமாக விரும்பி உண்ணப்படும் உணவாக காளான் உள்ளது. இயற்கையாகவும் வளரும் காளான்களில் சில விஷமுள்ளதாக, சில விஷமற்றதாகவும் வளரும். விஷக்காளான்கள் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும், அதிக வண்ணமுடையதாகவும் இருக்கும். காளான்  வளர்ப்பு சிறந்த வருவாய் ஈட்டித்தரும் எளிய தொழிலாக உள்ளது. சுவையுள்ளதாகவும், மிகுந்த சத்துக்கள் கொண்டதாகவும் இருப்பதோடு மிகுந்த மருத்துவப் பயன் கொண்டதாக உள்ளது. காளான் இதயத்தைக் காக்கும் அற்புத உணவாகும்.
காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. காளானில் உள்ள லென்ட்டைசன் (LENTYSINE), உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில்  உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது. எரிட்டிடைனின் (ERITADENIN) என்ற வேதிப்பொருட்கள் இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது.  எந்தவித கொழுப்புப் பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி  உறுப்புக்களுக்கு  எரிட்டினைன் அனுப்பி உடலை சமன் செய்கிறது. இதனால் இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு நன்கு இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம் சீராக செயல்படுகிறது.
பொதுவாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் போது உட்புறச் செல்களில் பொட்டாசியத்தின் அளவு குறையும். வெளிப்புறச் செல்களில் உள்ள சோடியம், உட்புறமுள்ள பொட்டாசியத்திற்கு சமமாக இருக்கும். இரத்த அழுத்தத்தின் போது வெளிப்புறத்தில் சோடியம் அதிகரிப்பதால் சமநிலை மாறினால் இதயத்தின் செயல்பாடு? உடற்புறத்தில் பொட்டாசியத்தின் அளவு குறைகிறது. இத்தகைய நிலையைச் சரி செய்ய பொட்டாசியம் சத்து தேவை. அந்த வகையில் பொட்டாசியம் சத்து உணவுப் பொருட்களில் மூலம் கிடைப்பது சாலச் சிறந்தது. பொட்டாசியம் அதிகம் உள்ள உணவு காளான்தான். 100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து 44%, சோடியம் 9% உள்ளது. எனவே இதயத்தைக் காக்க உணவாக காளான் உள்ளது.

இவைத் தவிர காளானின் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச்சத்து இரத்த காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும் மலட்டுத்தன்மையாகும். நிவாரணி. பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது. தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றி சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். 100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது.
உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டசத்தாக அமைகிறது. எளிதில் சீரணமாகும் தன்மை கொண்டது. கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது. உடல் இளைத்தவர்கள் தினம் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும். முட்டைகோஸ், பச்சைப்பட்டாணியுடன் சேர்த்து சமைத்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

1 comment:

  1. Borgata to reopen Thursday at 7 p.m. capacity | GoyangFC
    › business › casino 케이 뱃 › business › casino 3 days 포커 족보 순위 ago — 오늘뭐먹지룰렛 3 days ago 8 Casino.com. Borgata, which opened in 2008, is ready to reopen for 검증사이트먹튀랭크 business Friday at 7 p.m. capacity at bet365 9 p.m. after closing its doors.

    ReplyDelete